இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது
Kandy
Sri Lankan Peoples
Bribery Commission Sri Lanka
Crime
By Rakshana MA
கெலியோயாவில்(Galioye) உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதி நீதிமன்ற நீதிபதி இன்று(21) காலை தனது அலுவலகத்தில் இருந்தபோது இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது நடவடிக்கை
கண்டியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தக் கைது செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபரின் மகன் தொடர்பான விவாகரத்து வழக்கின் தீர்ப்பை விரைவுபடுத்துவதற்காக காஸி நீதிமன்ற நீதிபதி இலஞ்சம் கோரியிருந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |