திருகோணமலையில் வீதியிலிருந்து சடலம் மீட்பு

Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation Death
By Kiyas Shafe Feb 02, 2026 07:50 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (02.02.2026) காலை இடம்பெற்றுள்ளது. 

பொலிஸாருக்கு தகவல்

வீதியில் கிடந்த நபரை பாரத்த பொது மக்கள் இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

திருகோணமலையில் வீதியிலிருந்து சடலம் மீட்பு | Body Recovered In Trincomalee

இதனையடுத்து அங்கு விரைந்த திருகோணமலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நபர் விபத்தில் உயிரிழந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.