நீர்த்தேக்கத்தில் இருந்து மீட்க்கப்பட்ட மாணவியின் சடலம்

By Madheeha_Naz May 20, 2024 08:08 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை, ரத்னில்லகலை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி டிலுக்ஷினா (வயது 18) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி வீட்டில், நேற்று (18) இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வீட்டில் இருந்த மகளை காலையில் காணவில்லை என அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி, தேடுதலை ஆரம்பித்த பொலிஸார், மாணவியின் சடலத்தை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து மீட்டுள்ளனர்.