மட்டக்களப்பில் நிலவும் புற்றுநோய் மருந்து தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் புற்றுநோய்க்கான மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு கிடைக்கவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இன்று (11) இடம்பெற்ற மட்டக்களப்பு அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டமானது, பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரனின் ஒருங்கமைப்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் அமைச்சர் ஹந்து நெத்தி தலைமையில் இடம்பெற்றது
விரைவில் தீர்வு
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக நாங்கள் அறிந்தோம். அதனை எமது அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
இந்த மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து தருவதாக அமைச்சர் எம்மிடம் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |