சுன்னாகம் தமிழ் பொறுப்பதிகாரியின் அடுத்த அதிரடி நடவடிக்கை - இராணுவ சிப்பாய் கைது!
சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நேற்று(25.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ சிப்பாய் கைது
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி, இராணுவ முகாமில் பணியாற்றிய ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மைலிட்டி இராணுவ முகாமில் கடமை புரிந்துவருகிறார் என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் பதவியேற்ற பின்னர் கைது நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.