மன்னாரில் இராணுவ சிப்பாய் உட்பட நால்வர் கைது

Mannar Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 23, 2024 09:26 AM GMT
Laksi

Laksi

மன்னார் - தாழ்வுபாடு பிரதேசத்தில் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட நால்வர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கம் என்பவற்றைத் தேடி வந்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசாரணை

சம்பவம் தொடர்பில் குருநாகல் பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய இராணுவ லெப்டினன்ட் ஒருவரும்  கடுவெல, வவுனியா மற்றும் அனுராதபுரம் பிரதேசங்களைச் சேர்ந்த 29 முதல் 62 வயதுக்கு இடைப்பட்ட மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இராணுவ சிப்பாய் உட்பட நால்வர் கைது | Army Lieutenant Three Suspects Arrested In Mannar

இந்தநிலையில், இராணுவ அதிகாரியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது ஆயுதங்கள் மற்றும் தங்கம் என்பவற்றை அதி உணர்திறன் மூலம் கண்டு பிடிக்கும் ஸ்கானிங் இயந்திரங்கள் உள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW