நிறைவடையவுள்ள அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப காலம்: வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 09, 2024 02:21 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

கடந்த 5ஆம் திகதியுடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்தது.

இந்த நிலையில், அது இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் காலம்

எனவே, உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிறைவடையவுள்ள அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப காலம்: வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Application Period For Postal Voting Ends Today

அதேநேரம், எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW