சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கை முன்னெடுப்பு
சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கை மற்றும் கொடி விற்பனை இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இன்று (31) சாய்ந்தமருது - 12 ஆம் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம்
இவ் வேலைத்திட்டம் இன்று மே 31 முதல் ஜுன் 17 வரை இடம்பெறவுள்ளது.
அத்துடன், இதன் அங்கமாக போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு எதிர்வரும் ஜூன் 04 ஆம் திகதி சாய்ந்தமருது வொலிவேரியன் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் சகல பெண்களும் கலந்து கொள்ளுமாறு பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் இதன் போது அழைப்பு விடுத்தார்.
மேலும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தொழிலதிபர் எம்.யூ.நியாஸ், தலைப்பிட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், நிதி உதவியாளர் ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






