ஊசி மருந்தால் ஒவ்வாமை - ராகம வைத்தியசாலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

By Thulsi Mar 31, 2024 04:04 AM GMT
Thulsi

Thulsi

ராகம போதனா வைத்தியசாலையில் கோ-அமோக்ஸிக்லெவ் என்ற ஊசி மருந்தை செலுத்திய நோயாளி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த தகவலை ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்துள்ளார்.

ஊசி மருந்தால் ஏற்பட்ட ஒவ்வாமை

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  தெரிவித்தார்.

ஊசி மருந்தால் ஒவ்வாமை - ராகம வைத்தியசாலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு | Another Person Died In Ragama Hospital

எனினும் ஊசி மருந்தால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும் காது தொடர்பான சுகயீனம் காரணமாக கடந்த 22 ஆம் திகதி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.