விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை இன்று வெளியீடு
World Animal Welfare Day
Sri Lanka
Government Of Sri Lanka
By Rakshana MA
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பாம்புகள், குரங்குகள், மயில்கள் மற்றும் பருந்துகள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை இன்று (28) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வெளியீடு
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் காட்டு விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், விவசாய அமைச்சினால் நடத்தப்பட்ட முதல் விலங்கு கணக்கெடுப்பு கடந்த 15 ஆம் திகதி தீவு முழுவதும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |