அம்பாறையில் அடித்து கொலை செய்யப்பட்ட தாய்

Ampara Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA May 31, 2025 07:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை - பெரிய நீலாவணை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (30) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இவ்வாறு தாக்கப்பட்ட பெண் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த, இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா (38 வயது) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

தாக்குதல் சம்பவம்

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்படக்கூடிய வகையில் அடித்து தாக்கப்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் சடலமானது, அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

அம்பாறையில் அடித்து கொலை செய்யப்பட்ட தாய் | Ampara Mother Attack Incident

அதேவேளை இந்த பெண்ணின் கணவன் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற வீட்டில் காணப்படும் சி்.சி.டி.வியின் காணொளிகள் சேமிக்கும் கருவி (DVR) தாக்குதல் நடத்திய நபர்களால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சில பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு..!

நாட்டில் சில பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு..!

[GS9SC8Q

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGallery