பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல்

Srilanka Muslim Congress Risad Badhiutheen Election General Election 2024
By Laksi Sep 28, 2024 07:40 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை கிண்ணியாவில் நேற்று (27) இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட மத்தியக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெிரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அதேபோல அம்பாறை, புத்தளம் மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என உயர் பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

மத்திய குழுவை கூட்டி தீர்மானம்

இந்த நிலையில், இன்று (28) அம்பாறை மாவட்ட மத்திய குழுவை கூட்டி தீர்மானங்களை மேற்கொள்வோம் என றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல் | Acmc Decision On General Election 2024

குறித்த மத்திய குழு கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப், உயர் பீட உறுப்பினர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW