மூதூரில் வாகன விபத்து : ஒருவர் பலி

Trincomalee Sri Lankan Peoples Death
By Kiyas Shafe Apr 24, 2025 12:50 PM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

மூதூர் (Mutur) பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் -பெரியபாலம் பகுதில் இன்று (24) பகல் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கும் முறை

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கும் முறை

மேலதிக விசாரணை 

சம்பவத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டி சாரதியான மூதூர் -ஆனைச்சேனையைச் சேர்ந்த ஹதியத்துல்லாஹ் நஸீர் (வயது 62) என்பவர் என தெரிய வந்துள்ளது.

மூதூரில் வாகன விபத்து : ஒருவர் பலி | Accidnet At Mutur

முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது, சிறிய ரக கெப் வாகனம் பின்னால் இடித்து மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கெப் வாகனச் சாரதி மூதூர் பொலிஸில் சரணடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை மாற்றம்

இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை மாற்றம்

சம்மாந்துறையில் நீர் குழியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

சம்மாந்துறையில் நீர் குழியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW       


GalleryGalleryGalleryGalleryGalleryGallery