டயானா கமகேவின் மனு மீதான விசாரணை ஜூனில்

Sri Lanka Police Sri Lanka
By Nafeel May 02, 2023 02:41 PM GMT

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தாக்கல் செய்திருந்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.

அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததை அடுத்து கட்சி உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக டயனா கமகே தனது மனுவில் தெரிவித்துள்ளார்.