புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் படுகாயம்

Sri Lanka Police Puttalam Sri Lanka Police Investigation
By Laksi Aug 08, 2024 06:12 AM GMT
Laksi

Laksi

புத்தளம் - மாம்புரி பகுதியில் முச்சக்கரவண்டியுடன், இரு மோட்டார்சைக்கிள்கள் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன. 

குறித்த விபத்தானது நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது, இரண்டு மோட்டார்சைக்கிள்களில் பயணித்த நால்வர் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி: வெளியான தகவல்

வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி: வெளியான தகவல்

ஐந்து பேர் காயம்

இந்த நிலையில், காயமடைந்த ஐந்து பேரும் அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் படுகாயம் | 5 People Injured In An Accident In Puttalam

இதேவேளை, பலத்த காயங்களுக்கு உள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மக்களுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய துறை: ரணில் அறிவிப்பு

இலங்கை மக்களுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய துறை: ரணில் அறிவிப்பு

மேலதிக விசாரணை

மோட்டார்சைக்கிள்களில் பயணித்த நால்வரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி மாம்புரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் படுகாயம் | 5 People Injured In An Accident In Puttalam

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 22 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 22 வேட்பாளர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW