திருக்கோவிலில் கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு
அம்பாறை - திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள வம்மியடி ஆற்று பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (09) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸாருடன் இணைந்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குண்டுகள்
இதன்போது வம்மியடி ஆற்றுப் பகுதியில் இருக்கும் மரம் ஒன்றின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோயில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த பிரதேசதம் கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதுடன், அங்கு அவர்களின் முகாம் இருந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |