காரிலிருந்து 4 பங்களாதேஷ் சகோதரர்கள் சடலமாக மீட்பு!
Bangladesh
Death
World
By Vinoja
ஒரு திருமணத்திற்காகத் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, ஓமானில் ஒரு காரில் 4 பங்களாதேஷ் சகோதரர்கள் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் காரின் ஏசி இயக்கப்பட்ட நிலையில் உறங்கிக்கொண்டிருந்தபோதே உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்களின் மரணத்துக்கு கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த நாள்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஓமன் காவல்துறை இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றது.