ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய விஜயதாச ராஜபக்ச

Dr Wijeyadasa Rajapakshe Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 01, 2024 05:43 AM GMT
Laksi

Laksi

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில், விஜயதாச ராஜபக்ச இராஜகிரிய தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (1) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, விஜயதாச ராஜபக்ச சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.

கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

கட்டுப்பணம்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய விஜயதாச ராஜபக்ச | 2024 Presidential Electionwijeyadasa Rajapakshe

இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் 7 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதியமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ச அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உணவுகள் தொடர்பில் போலி விளம்பரங்கள்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உணவுகள் தொடர்பில் போலி விளம்பரங்கள்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW