இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Sri Lanka Government Of Sri Lanka Economy of Sri Lanka
By Dev Mar 26, 2024 07:59 AM GMT
Dev

Dev

இலங்கையில் குறைந்த வருமானம் ஈட்டும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசியை வழங்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஏப்ரல் மாதத்தில் 10 கிலோ அரிசியும் மே மாதத்தில் 10 கிலோ அரிசியும் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்கான 10 கிலோகிராம் அரிசியை தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு

அதேவேளை, மே மாதத்திற்கான அரிசி குறித்த மாதத்தின் முதல் வாரத்தில் வழக்கப்படவுள்ளது.

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி | 20 Kilogram Rice To Sri Lankan Families

அத்துடன், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பையும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.