காத்தான்குடியில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் கைது
காத்தான்குடியில் நீண்ட காலமாக தேடப்பட்டுவந்த இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளளர்.
குறித்த விடயத்தினை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2788 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன் தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணை
குறித்த கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு - காத்தான்குடி, பாலமுனை பிரதேசத்தில் வைத்து 30 மற்றும் 35 வயதுடைய இரு நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 30 வயதுடைய நபரிடமிருந்து 1228 மில்லிகிராம் போதைப்பொருளும் மற்றும் 35 வயதுடைய நபரிடமிருந்து 1560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



