கொழும்பு புறநகர் பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

Agriculture Water And Action For Rural Development Colombo Water Cut
By Anadhi Apr 21, 2024 01:40 AM GMT
Anadhi

Anadhi

கொழும்பை அண்டிய சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி , பேலியகொடை, வத்தளை, ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி, பியகம, மஹர, கந்தானை மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளிலே நீர் விநியோகம் தடை முன்னெடுக்கப்படவுள்ளது.

விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

குறித்த பிரதேசங்களில் எதிர்வரும் 24 ஆம் திகதி சில பகுதிகளில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு புறநகர் பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு | 12 Hour Water Cut In Some Areas Near Colombo

எனவே குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் முன்கூட்டியே நீரைக் களஞ்சியப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.