சாய்ந்தமருது மகா வித்தியாலயத்தில் மாணவர் நாடாளுமன்றத் தேர்தல்

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Apr 29, 2025 12:10 PM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை(Kalmunai) கல்வி வலய சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் மாணவர் நாடாளுமன்ற பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களிடையே ஜனநாயக மரபுகளை மதித்தல் மற்றும் தலைமைத்துவ ஆற்றல்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட சமூக விஞ்ஞான பாடத்தின் இணைப்பாடவிதான செயற்பாடான மாணவர் நாடாளுமன்றத்தை உருவாக்கும் பொருட்டு இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

மாணவர் நாடாளுமன்றம்

பாடசாலையின் அதிபர் எம்.சி.நஸ்லின் றிப்காவின் ஆலோசனை வழிகாட்டலில் மாணவர் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பான ஆசிரியர் அமீர் ஹுசைன் தலைமையில் மிக நேர்த்தியாக நடைபெற்றுள்ளது.

சாய்ந்தமருது மகா வித்தியாலயத்தில் மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் | Student Parliament Election At Sainthamaruthu

இந்த செயற்பாட்டினை பாடசாலையின் சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள் திட்டமிட்டு நடாத்தியுள்ளனர்.

இந்த தேர்தல் நடவடிக்கையினை வலய நாடாளுமன்ற இணைப்பாளர் ஆசிரிய ஆலோசகர் ஐ.எம்.மௌசூர், சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர்களான முஹம்மட் தையூப், ஜுலூல் மற்றும் ஆங்கில பாடத்துக்கான வலய இணைப்பாளர் எம்.ஆரிப் ஆகிடீயோர் கண்காணிப்பு செய்துள்ளனர்.

மேலும், இந்த தேர்தல் நடிவடிக்கை செயற்பாடுகளுக்கு பிரதி அதிபர். ஐ.எம்.எஃப்.மர்சுனா, உதவி அதிபர் அப்துல் கபூர் அவர்களும் ஏனைய ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கி மாணவர் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

வரி வருவாயில் இலங்கை அடைந்துள்ள உச்சம்!

வரி வருவாயில் இலங்கை அடைந்துள்ள உச்சம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGallery