நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்

Colombo Ranil Wickremesinghe Supreme Court of Sri Lanka
By Faarika Faizal Oct 29, 2025 08:42 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வில், அரசு பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு கடந்த  ஒகஸ்ட் 22 முதல் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு

ஆனால் அவரது மருத்துவ நிலையை கருத்தில் கொண்டு, சிறைச்சாலை மருத்துவமனையின் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீதிமன்றில் முன்னிலையானார் ரணில் | Ranil In Court

சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த  ஒகஸ்ட் 26 அன்று திரும்பப் பெறப்பட்டபோது, ​​அவர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் ஸ்கைப் மூலம் வழக்கு நடவடிக்கைகளில் இணைந்ததோடு, அன்றைய தினம் அவருக்கு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று (29.10.2025) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


You May Like This Video...


கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ள திரவத்தை குடித்த இருவர் பலி : புத்தளத்தில் சம்பவம்

கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ள திரவத்தை குடித்த இருவர் பலி : புத்தளத்தில் சம்பவம்

பாதுகாப்பு கோரி சர்வதேசத்தை நாடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்

பாதுகாப்பு கோரி சர்வதேசத்தை நாடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW