வவுனியாவில் ஒருவர் வெட்டிக்கொலை - மனைவி தற்கொலை

By Dharu May 03, 2024 01:44 PM GMT
Dharu

Dharu

Courtesy: Chandana

வவுனியா - நெடுங்கேணி, கிரிசுட்டான் பகுதி வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை 

மேலும், உயிரிழந்தவரின் நபரின் மனைவியான 37வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அருகில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார், எனவும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் ஒருவர் வெட்டிக்கொலை - மனைவி தற்கொலை | One Was Hacked To Death In Vavuniya

மேலும், மனைவியின் சடலம் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் கணவனின் சடலம் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.