எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலை விடுமுறை
எசல கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படும் என கண்டி வலயக் கல்வி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை
மேலும், கண்டியில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறைகள் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை வழங்கப்படுவதோடு முஸ்லிம் பாடசாலைகள் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 24ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரலாற்று சிறப்புமிக்க கண்டி சிறி தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதற்கமைய, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்புல் பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர வீதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
மேலும் வீதி ஊர்வலத்திற்கு போதுமான யானைகள் இல்லாதது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |