காசாவில் இஸ்ரேலிய படைகள் நிலைநிறுத்தப்படும்! நெதன்யாகு எச்சரிக்கை
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிடும் வரை காசாவில் இஸ்ரேலிய படைகள் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது இஸ்ரேலின் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த பெஞ்சமின் நெதன்யாகு, “ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்கும் வரை அதன் மீதான அழுத்தத்தை தொடர்ந்து இறுக பிடிப்பதற்காக காசா பிராந்தியத்தில் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
கைதிகள் விடுவிப்பு
அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போல பின்வாங்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தாலும், ஹமாஸ் பலஸ்தீன அரசாங்கத்திடம் இருந்து முழுமையாக வெளியேரும் வரை இஸ்ரேலிய படைகள் வெளியேற போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது எளிய வழியில் அடையப்பட வேண்டும் அல்லது கடினமான வழியில் அடையப்படும் என்றும் ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பணயக் கைதிகள் விடுவிப்பு எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |