நாட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Kandy Nuwara Eliya Sri Lanka Weather
By Fathima Dec 02, 2025 07:28 AM GMT
Fathima

Fathima

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை அனர்த்த நிலை காரணமாக, 336 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்து மத்திய நிலைய அறிக்கை தெரிவிக்கின்றது.    

இன்று (02) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை  

இந்த அறிக்கையின்படி, மோசமான வானிலையால் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Disaster Deaths Increased

இதே நேரத்தில், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், குருநாகலாவில் 52 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 150 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 62 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் தற்போது பேரிடர் காரணமாக காணாமல்போயுள்ளனர்.




Gallery