கொழும்புப் பல்கலைக்கழக நூலகத்திற்கு தனது புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய சந்திரிக்கா
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது தனிப்பட்ட நூலகத்தில் இருந்து சில புத்தகங்களை கொழும்புப் பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்த நன்கொடையில் பெறுமதியான கல்வி மற்றும் அறிவார்ந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்ததாக சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பெறுமதியான கல்வி மற்றும் அறிவார்ந்த புத்தகங்கள்
அத்துடன், சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட அறிக்கையில்: “எனது தனிப்பட்ட நூலகத்தில் இருந்து பெறுமதியான கல்வி மற்றும் அறிவார்ந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து கொழும்புப் பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினேன், மேலும் நூலக ஊழியர்களுடன் சிறிது நேரம் செலவழித்தேன்.

இந்த சந்தர்ப்பத்தில், பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட மற்றும் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி ஆகியோர் வழங்கிய ஆதரவையும் ஒருங்கிணைப்பையும் நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |