<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-08-05T15:33:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/indian-foreign-secretary-holds-talks-president-1785936717"></link>
            <id>https://muthanmai.com/article/indian-foreign-secretary-holds-talks-president-1785936717</id>
            <summary type="text">இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைக் கொழும்பில் சந்தித்துப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைக் கொழும்பில் சந்தித்துப்
பேச்சு நடத்தினார்.
</p><p>
இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த
விடயங்கள் மற்றும் இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு
வரும் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.</p><h2>கடன் வசதி தொடர்பான ஒப்பந்தங்கள்</h2><p>
</p><p>
சந்திப்பைத் தொடர்ந்து, 350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வசதி
தொடர்பான ஒப்பந்தங்கள் இரு தரப்பினராலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.</p><p>

இக்கடன் வசதியானது, டித்வா புயலுக்குப் பின்னர் இந்தியா இலங்கைக்கு அறிவித்த
450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள்கட்டமைப்பு உதவித் தொகுப்பின்
ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>மேற்கொள்ளப்படவுள்ள&nbsp;பணிகள்</h2><p>

இந்த நிதியின் ஊடாகப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டமைப்பு,
உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பேரிடருக்குப் பின்னர் ஏற்பட்ட கொள்வனவுத்
தேவைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக மீளக் கட்டியெழுப்பவும்,
இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கவும்
இந்தியா உறுதிபூண்டுள்ளதை இந்த ஒப்பந்தப் பரிமாற்றம் எடுத்துக்காட்டுகின்றது
என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-05T14:26:00+00:00</updated>
        </entry>
    </feed>
