<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-08-18T03:40:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து மக்களுக்கு விசேட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/cert-warns-sl-people-1787018335"></link>
            <id>https://muthanmai.com/article/cert-warns-sl-people-1787018335</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளைப் போலப் போலி வேடமிட்டு பல மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளைப் போலப் போலி வேடமிட்டு பல மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
குறித்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்புகளைப் பயன்படுத்தி அதிநவீன முறையில் நிதி மோசடி செய்யப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
மோசடிக்காரர்கள் முதலில் தொலைபேசி அழைப்புகள் அல்லது சமூக ஊடகங்கள் வழியாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி விவரங்களைக் கண்டறிவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a922edaa-f1da-490a-9a04-5a8515673fd8/26-6a83bc612f222.webp' /></p><p>
பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளில் உள்ள பணம் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டது எனக் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதுகுறித்து நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>பொதுமக்களின் பயத்தை அதிகரிக்க, மத்திய வங்கியின் போலி கடிதத் தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் பொறிக்கப்பட்ட ஆவணங்களை மோசடிக்காரர்கள் அனுப்பி வைக்கின்றனர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
விசாரணைக்காகப் பணத்தைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி, ஒரு தனியார் வங்கிக் கணக்கிற்குத் தொகையை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.
</p><p>இந்தக் கணக்கு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரியுடையது எனக் கூறி, வைப்புத் தொகையில் பாதியை முதலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றனர்.</p><p>
பணம் வைப்பு செய்யப்பட்டதற்கான ரசீதை அனுப்பிய பின், பணத்தைச் சரிபார்த்துவிட்டு மீண்டும் பழைய கணக்கிற்கே மாற்றுமாறு கோரும் பொலிஸ் கடிதம் ஒன்றை வழங்குவதாகவும் கூறி நம்ப வைக்கின்றனர்.</p><p>
இந்த மோசடிக்காரர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி ரப்பர் முத்திரைகள் போன்றவை கைவசம் உள்ளதால், அவர்கள் மிகவும் திட்டமிட்டு இக்குற்றங்களைச் செய்து வருகின்றனர்.</p><p>
ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியவர்களே இந்த மோசடிகளுக்கு அதிகம் சிக்கக்கூடிய அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் இது குறித்து விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T03:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமான் மீது குண்டுதாக்குதல்.. ட்ரம்ப் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/bombing-oman-trump-issues-stern-warning-1786997407"></link>
            <id>https://muthanmai.com/article/bombing-oman-trump-issues-stern-warning-1786997407</id>
            <summary type="text">ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஓமான் தடையாக இருந்தால், அந்நாட்டின் மீது குண்டுவீசப்படும் என அமெரிக்க ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஓமான் தடையாக இருந்தால், அந்நாட்டின் மீது குண்டுவீசப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி முன்னேற்றம் அடைந்து வருகின்றன. </p><h2>

சரணடைதல்.. </h2><p>
இந்நிலையில், ஓமான் குறுக்கிட்டால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ec1f9d-e9d6-47bb-887b-7b032175a4c1/26-6a83763d121a4.webp' /></p><p> ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கான இரண்டு மாத கால அவகாசம் எந்த திருப்புமுனையும் இன்றி முடிவடைந்த நிலையில், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் நீண்டகால பங்காளியாகவும் அமைதிப் பேச்சுவார்த்தை மத்தியஸ்தராகவும் திகழும் ஓமான் மீது ட்ரம்ப் விடுத்துள்ள இந்த மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T00:09:42+00:00</updated>
        </entry>
    </feed>
