<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-07-30T04:22:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்-நினோ வெப்ப அலை குறித்து பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/warning-about-heat-wave-by-health-official-1785381190"></link>
            <id>https://muthanmai.com/article/warning-about-heat-wave-by-health-official-1785381190</id>
            <summary type="text">எல்-நினோ காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில், மதுபானம் மற்றும் செயற்கை இனிப்புச் சுவை கொண்ட குளிர்பானங்களை அருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்-நினோ காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில், மதுபானம் மற்றும் செயற்கை இனிப்புச் சுவை கொண்ட குளிர்பானங்களை அருந்துவது உடலுக்கு மிகுந்த ஆபத்தானது என சுகாதார அமைச்சின் தொழிலும் சுகாதார அலகு எச்சரித்துள்ளது.
</p><p>இது வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு மரணத்தில் முடியக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>தற்போது சூழலின் வெப்பநிலை மிக உயர் மட்டத்தை எட்டியுள்ளதாகவும், மதுபானம் அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து விரைவாகக் குறைந்து பல்வேறு தீவிர உடலாரோக்கிய சிக்கல்கள் ஏற்படும் என சமூக மருத்துவ நிபுணர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05890dc3-d7a5-4fe8-8f9f-15f143f2009b/26-6a6ac147e8285.webp' /></p><p>
</p><p>எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், உடலின் நீர்ச்சத்தை தக்கவைக்க சுத்தமான குடிநீர், இளநீர் மற்றும் தர்பூசணி போன்ற இயற்கை உணவுகளை அதிகளவில் உட்கொள்வது மிகவும் சிறந்தது என அறிவிவுறுத்தியுள்ளார்.
</p><p>சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையிலான காலத்தில் நேரடி வெயிலில் செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
</p><p>குறிப்பாக சிறுநீரக நோயாளிகள், இதய நோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் தங்களது மருந்துகளை உரிய நேரத்தில் உட்கொண்டு, உடலை அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>வெப்ப பக்கவாத பாதிப்பு மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சுகாதார அமைச்சு வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு சமூக மருத்துவ நிபுணர் இனோகா சுரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T03:22:02+00:00</updated>
        </entry>
    </feed>
