<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-09-10T07:33:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் தீவு மணல் அகழ்வு தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் சபை கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/catholic-bishops-conference-concerned-sand-mining-1789017065"></link>
            <id>https://muthanmai.com/article/catholic-bishops-conference-concerned-sand-mining-1789017065</id>
            <summary type="text">எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
மன்னார் தீவில் இடம்பெறும் மணல் அகழ்வு நடவடிக்கைகளால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் தமது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கத்தோலிக்க ஆயர்கள் சபை&nbsp;</h2><p>
</p><p>
பொருளாதார அபிவிருத்திக்கான சாதகமான முயற்சிகளாக இத்தகைய நடவடிக்கைகள் கருதப்பட்டாலும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதுடன், திட்டங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என கத்தோலிக்க ஆயர்கள் சபை வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fe6dabf-79c4-44a0-9958-5f6a99d25406/26-6aa2418bce115.webp' /></p><p>மேலும், எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு முன்னர் அப்பகுதி மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் முறையான கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.</p><p>
மன்னார் தீவின் மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரத்திற்கும் நீர்வளத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

இது தொடர்பில் ஆகஸ்ட் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபையின் முழுமையான அமர்விலும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன்பே 22 பற்றி ஜனாதிபதி பேசுவது ஏன்..! சஜித் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/why-president-speaking-about-the-22nd-amendment-1789013039"></link>
            <id>https://muthanmai.com/article/why-president-speaking-about-the-22nd-amendment-1789013039</id>
            <summary type="text">நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்காத நிலையில், அரசமைப்பின் 22 ஆவது
திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி பகிரங்கமாகக் கருத்துத்
தெரிவிப்பது எவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்காத நிலையில், அரசமைப்பின் 22 ஆவது
திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி பகிரங்கமாகக் கருத்துத்
தெரிவிப்பது எவ்வாறு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி
எழுப்பியுள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று(09.09.2026) நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>தீர்ப்பை இன்னும் வழங்காத சூழலில்</h2><p>மேலும் தெரிவிக்கையில், “20 ஆவது திருத்தத்தின்போது, அதற்கு நாடாளுமன்ற அனுமதி மாத்திரம் போதாது
என்றும் சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்றும் அன்று அநுர குமார திசாநாயக்க
கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03e4cf90-80bd-4dbd-9dd4-59095f13f3a3/26-6aa230808ec4f.webp' /></p><p> </p><p>ஆனால், அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில், சர்வஜன வாக்கெடுப்பு
இல்லாமலேயே அதனை நிறைவேற்றுவதாகக் குறிப்பிடுகின்றார்.</p><p> கண்ணியத்துக்குரிய
நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்னும் வழங்காத சூழலில், ஜனாதிபதி முன்கூட்டியே
தீர்ப்பளிப்பது போன்ற பாணியில் கருத்துத் தெரிவிப்பது பாரிய பிரச்சினைக்குரிய
விடயமாகும்.&nbsp;</p><h2>மூன்றில் இரண்டு பெரும்பான்மை</h2><p>பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் என்பது அரசுகளின் நிறுவனமாக இல்லாவிட்டாலும்,
பொதுநலவாய அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ அமைப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e9f37f-e730-4e2f-8085-0e5d8d761047/26-6aa23081561c5.webp' /></p><p> </p><p>ஆனால், அரசு இதனைப் பணம் செலுத்திச் செயற்படும் அமைப்பு எனக்
கூறித் தரம் தாழ்த்திப் பேசியுள்ளது.

22 ஆவது திருத்தம் ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தச்
சங்கம் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்துள்ளதுடன் நீதி அமைச்சரும்
அதிகாரிகளும் அதன் தலைவரைச் சந்திப்பதைத் தவிர்த்துள்ளனர்.</p><p> எனவே, நீதி
அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு வந்து இந்தச் சங்கத்திடம் மன்னிப்புக் கோர
வேண்டும்.

ஊடகத்துறையை அடக்கும் நோக்கத்துடன் இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை
உருவாக்க அரசு முற்படுகின்றது.</p><p> இது ஊடகச் சுதந்திரத்துக்கு விடப்படும் மரண
அடியாகும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஊடகங்களை
அடக்குவதற்கு எதிர்க்கட்சி இடமளிக்காது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T05:10:27+00:00</updated>
        </entry>
    </feed>
