<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-08-06T17:31:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவர அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/negombo-prison-clash-report-handed-1786024436"></link>
            <id>https://muthanmai.com/article/negombo-prison-clash-report-handed-1786024436</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>
கடந்த ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 22 கைதிகள் மற்றும் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும், இச்சம்பவத்தின் போது 106 கைதிகளும் 21 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df9b2f2c-b9db-4c4a-8a4a-95d082c5a462/26-6a7491fb65b7d.webp' /></p><p>
இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகத்&nbsp; அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட மேலதிக நிவாரண நடவடிக்கைகளை பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>உயிரிழந்த அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகை, ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் அவர்கள் பெற்ற கடன்கள் தொடர்பாக உரிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
</p><p>காயமடைந்த அதிகாரிகளின் உடல் நிலை மற்றும் ஊனமுற்ற தன்மையின் அளவை மதிப்பிட்டு, அவர்களுக்குத் தேவையான பொருத்தமான நிவாரணப் பரிந்துரைகளை இந்தக் குழு வழங்கும் எனவும் அமைச்சர் நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T15:01:21+00:00</updated>
        </entry>
    </feed>
