<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-07-15T06:42:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு சுமார் 15 இலட்சம் பவுண்டுகள் நிதி உதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/bolton-muslim-girls-school-secures-15m-fund-1784078071"></link>
            <id>https://muthanmai.com/article/bolton-muslim-girls-school-secures-15m-fund-1784078071</id>
            <summary type="text">பிரித்தானியாவின் போல்டன் முஸ்லிம் மகளிர் பாடசாலை (Bolton Muslim Girls’ School) தனது வளாக வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசிடமிருந்து சுமார் 15 இலட்சம் பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் போல்டன் முஸ்லிம் மகளிர் பாடசாலை (Bolton Muslim Girls’ School) தனது வளாக வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசிடமிருந்து சுமார் 15 இலட்சம் பவுண்டுகள் நிதியுதவியைப் பெற்றுள்ளது. </p><p>2022ஆம் ஆண்டில் பின்தங்கியிருந்த இப்பாடசாலை, தற்போது பல முக்கிய சாதனைகளை நோக்கி வியக்கத்தக்க வகையில் முன்னேறியுள்ளது.
</p><p>
இப்பாடசாலைக்கு உள்ளடக்கிய கல்விச் செயல்பாடுகளுக்கான IQM Centre of Excellence அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதுடன், அண்மைய Ofsted ஆய்விலும் மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கத்திற்காக Outstanding தரமதிப்பீடு கிடைத்துள்ளது. </p><p>மேலும், முஸ்லிம் பாடசாலைகளின் கூட்டமைப்பு (AMS) நடத்திய சமய மற்றும் ஒழுக்க விழுமியங்கள் சார்ந்த ஆய்விலும் இப்பாடசாலை மிகச்சிறந்த (Outstanding) நிலையை எட்டியுள்ளது.
</p><p>
பெறப்பட்ட நிதியுதவியின் மூலம் இப்பாடசாலையின் மில் (Mill) கட்டடம் நவீன வகுப்பறைகளாகவும் அலுவலகங்களாகவும் மாற்றப்படவுள்ளன. </p><p>இதன் மூலம் தற்காலிகக் கட்டடங்கள் நீக்கப்பட்டு, 11 புதிய வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு, இப்பாடசாலையின் மாணவர் கொள்ளளவு 750 இலிருந்து 900 ஆக உயர்த்தப்படவுள்ளது. </p><p>இந்த வரலாற்றுச் சாதனை குறித்துப் பேசிய இப்பாடசாலையின் தலைமை ஆசிரியர் இத்ரிஷ் படேல், இது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாகத்தின் கூட்டு உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> அத்துடன், இப்பாடசாலை தங்களது தொகுதிக்குப் பெருமை சேர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் குரேஷியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T01:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை கலவரத்தின் ஆரம்ப புள்ளி: ஜூலை 3ஆம் திகதி ஆரம்பமான கலவரம் - வெளிவராத பல கதைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/negombo-prison-inside-police-1784075075"></link>
            <id>https://muthanmai.com/article/negombo-prison-inside-police-1784075075</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த தகவல்களின்படி, ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையின் A1 வார்டில் இருந்த கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதி, உடற்பயிற்சிக்காக வழங்கப்படும் 30 நிமிடங்களை விட மேலதிக நேரம் கோரியுள்ளார்.
</p><p>

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிறைச்சாலை அதிகாரியை திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை, அவர் A2 வார்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>
 உடற்பயிற்சி நேரம்..</h2><p> 
இதுவே வன்முறை பரவக் காரணமாக அமைந்ததாகவும், நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d089ec9a-6394-40ff-904f-d68c2ee33a75/26-6a56d345e8d54.webp' /></p><p> 

மேலும், இதன் பின்னணியில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.
</p><p>
கொழும்பில் இருந்து சிறைச்சாலை அவசரக்கால அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், கைதிகள் கூரைகளின் மீது ஏறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
மறுநாள் காலை உணவை வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் கற்கள், மரத்தடிகள் மற்றும் இரும்புக்கம்பிகளால் தாக்கியுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் தப்பிச் சென்ற நிலையில், கொழும்பில் இருந்து சென்ற அதிகாரிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியையும் நீட்டியுள்ளனர்.</p><h2>CCTV பதிவுகள்</h2><p> </p><p>இதனை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் (STF) கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


அது பலனளிக்காததால் வான்நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da580f09-e1cd-4852-b4b6-c70be9538a0c/26-6a56d3469dc51.webp' /></p><p> </p><p>பின்னர், சிறைச்சாலையின் நுழைவாயில் பகுதி ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தி, உள்ளே சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு F-58 ரக துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன. </p><p>அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த 60 துப்பாக்கிகள் தடயவியல் சோதனைக்காகப் பெறப்பட்டுள்ளன என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், சிறைச்சாலையின் CCTV பதிவுகள் மொரட்டுவை பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் 40 சிஐடி அதிகாரிகள் அடங்கிய 3 குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 STF அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. </p><p>கொலைக்குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.</p><p> 

இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீர்கொழும்பு நீதவான் ஷாலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார். </p><p>

அத்துடன், மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடமும் வாக்குமூலங்களைப் பெறுமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T00:53:57+00:00</updated>
        </entry>
    </feed>
