<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-08-18T07:45:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய நிதி மோசடிக்கான திட்டம்! பொதுமக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/sri-lanka-cert-warned-public-about-fraud-scheme-1786964750"></link>
            <id>https://muthanmai.com/article/sri-lanka-cert-warned-public-about-fraud-scheme-1786964750</id>
            <summary type="text">
இலங்கை மத்திய வங்கி மற்றும் காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களின் வங்கி வைப்புத்தொகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கை மத்திய வங்கி மற்றும் காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களின் வங்கி வைப்புத்தொகைகளைக் கொள்ளையடிக்கும் நுட்பமான மோசடித் திட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
பாதிக்கப்பட்ட நபர்களின் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் பற்றிய தகவல்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி, கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக மோசடிக்காரர்கள் அவர்களைத் தொடர்புகொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>மோசடியாளர்களின் திட்டம்</h2><p>
</p><p>
அதன்போது, வைப்புத்தொகைகள் மோசடியான வழிகளில் பெறப்பட்டதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், அதுகுறித்து FCID விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறி குறித்த சந்தேகபர்கள் மக்களை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942de0d4-0c5b-4870-9626-4d7cd2d6c89d/26-6a82f2f7800e1.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, தங்களது கூற்றை உண்மை என நம்பவைப்பதற்காகப் போலி மத்திய வங்கி கடிதத் தலைப்புகள், போலி அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் அடங்கிய போலிக் கடிதங்களை அனுப்பி வைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, FCID அதிகாரியுடையது எனக் கூறி ஒரு குறிப்பிட்ட தனியார் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றுமாறு அறிவுறுத்துவதுடன், சில சந்தர்ப்பங்களில் வைப்புத்தொகையில் பாதியை மாற்றிவிட்டு அதன் ரசீதை ஆதாரமாக அனுப்புமாறும் கோருவதாகவும் தெரியவருகிறது.</p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில், சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்கள் முடிந்ததும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி மக்களை அவர்கள் ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebe44d98-5590-40d7-ac4c-1545f299c66a/26-6a82f2f8638d6.webp' /></p><p>
இந்த மோசடிக்காரர்கள் காவல்துறை சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் ரப்பர் முத்திரைகளை வைத்துக் கொண்டு மிகவும் நுட்பமாக இயங்கி வருவதாக Sri Lanka CERT தெரிவித்துள்ளது. </p><p>

எனவே, இத்தகைய கோரிக்கைகளுக்குப் படிந்து நிதித் தகவல்களை வழங்கவோ அல்லது பணத்தை மாற்றி அனுப்பவோ வேண்டாம் என்றும், குறிப்பாக ஓய்வுபெற்றவர்கள் மற்றும் முதியவர்கள் குறித்து குடும்பத்தினர் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-18T05:39:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து மக்களுக்கு விசேட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/cert-warns-sl-people-1787018335"></link>
            <id>https://muthanmai.com/article/cert-warns-sl-people-1787018335</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளைப் போலப் போலி வேடமிட்டு பல மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளைப் போலப் போலி வேடமிட்டு பல மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
குறித்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்புகளைப் பயன்படுத்தி அதிநவீன முறையில் நிதி மோசடி செய்யப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
மோசடிக்காரர்கள் முதலில் தொலைபேசி அழைப்புகள் அல்லது சமூக ஊடகங்கள் வழியாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி விவரங்களைக் கண்டறிவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a922edaa-f1da-490a-9a04-5a8515673fd8/26-6a83bc612f222.webp' /></p><p>
பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளில் உள்ள பணம் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டது எனக் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதுகுறித்து நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>பொதுமக்களின் பயத்தை அதிகரிக்க, மத்திய வங்கியின் போலி கடிதத் தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் பொறிக்கப்பட்ட ஆவணங்களை மோசடிக்காரர்கள் அனுப்பி வைக்கின்றனர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
விசாரணைக்காகப் பணத்தைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி, ஒரு தனியார் வங்கிக் கணக்கிற்குத் தொகையை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.
</p><p>இந்தக் கணக்கு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரியுடையது எனக் கூறி, வைப்புத் தொகையில் பாதியை முதலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றனர்.</p><p>
பணம் வைப்பு செய்யப்பட்டதற்கான ரசீதை அனுப்பிய பின், பணத்தைச் சரிபார்த்துவிட்டு மீண்டும் பழைய கணக்கிற்கே மாற்றுமாறு கோரும் பொலிஸ் கடிதம் ஒன்றை வழங்குவதாகவும் கூறி நம்ப வைக்கின்றனர்.</p><p>
இந்த மோசடிக்காரர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி ரப்பர் முத்திரைகள் போன்றவை கைவசம் உள்ளதால், அவர்கள் மிகவும் திட்டமிட்டு இக்குற்றங்களைச் செய்து வருகின்றனர்.</p><p>
ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியவர்களே இந்த மோசடிகளுக்கு அதிகம் சிக்கக்கூடிய அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் இது குறித்து விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T03:21:04+00:00</updated>
        </entry>
    </feed>
