<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-08-28T14:34:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனுஷவின் விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/legal-action-against-a-manusha-1787917104"></link>
            <id>https://muthanmai.com/article/legal-action-against-a-manusha-1787917104</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்தடுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணை வழங்கப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்தடுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணை வழங்கப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மீதான முதற்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மனுஷா நனயக்கார மீது தொடுக்கப்பட்ட வழக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (28.08.2026) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகமவிடம் தெரிவித்த்துள்ளது.
</p><p>
அதன்படி, இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்த்துக்கொள்ளப்பட்ட போது, 
​​இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணை முடிவடைந்துவிட்டதால், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.</p><p>எனவே, டிசம்பர் 18 ஆம் திகதியன்று மேலதிக அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முந்தைய அரசாங்கத்தின் போது, ​​விவசாயப் பணிகளுக்காக இஸ்ரேலுக்குத் தொழிலாளர்களை அனுப்பும்போது, ​​வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளிடம் செல்வாக்கு செலுத்த தனது அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இந்த சந்தேக நபர் இலஞ்ச ஆணையத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-28T11:49:06+00:00</updated>
        </entry>
    </feed>
