<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-08-17T11:33:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபாணி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/kanjipani-imran-arrested-in-italy-1786944451"></link>
            <id>https://muthanmai.com/article/kanjipani-imran-arrested-in-italy-1786944451</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணி இம்ரான், விரைவில் இத்தாலியில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணி இம்ரான், விரைவில் இத்தாலியில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பாதுகாப்பு பிரதி அமைச்சரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான அருண ஜெயசேகரவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,</p><p></p><h2>வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் குற்றவாளி</h2><p> 

''நாட்டிலிருந்து தப்பி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணி இம்ரான், மிக விரைவில் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்படுவார்

இதுவரை சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளர்.</p><p></p><p>
</p><p>
இந்நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய ஐந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர். </p><p>

இம்ரான் குழுவுடன் தொடர்புடைய மூவர் நான்கு நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டனர். </p><p>இவரையும் நாளை மறுநாள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>

மேலும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு, வெளிநாடுகளில் உள்ள முக்கிய கடத்தல்காரர்களை நீதியின் முன் நிறுத்துவது ஒரு அத்தியாவசியமான நடவடிக்கை என்று பாதுகாப்புப் படைகள் சுட்டிக்காட்டுகின்றன." என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-17T05:38:17+00:00</updated>
        </entry>
    </feed>
