<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-08-03T09:30:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அவசர அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1785742242"></link>
            <id>https://muthanmai.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1785742242</id>
            <summary type="text">வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்குப் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில் குறித்த எச்சரிக்கை இன்று (03-08-2026) விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (04-08-2026) காலை 11:30 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

நாட்டைச் சூழவுள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி (Southwest Monsoon) தீவிரமடைந்துள்ளதன் காரணமாக தீவின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:59:14+00:00</updated>
        </entry>
    </feed>
