<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-07-14T12:49:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 பேரிடம் வாக்குமூலம் - நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பின்னணி முன்னாள் தலைவர்களா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/background-to-the-negombo-prison-conflict-1784029255"></link>
            <id>https://muthanmai.com/article/background-to-the-negombo-prison-conflict-1784029255</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் இன்று(14.07.2026) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p> </p><p>

கடந்த 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில், இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2> 

சிறைச்சாலை மோதல் வதந்திகள்</h2><p>
இந்த சம்பவத்தை தொடர்ந்து 40ஆயிரம் சிறைக் கைதிகள் இலங்கையில் வேறு வேறு இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19de53b0-7380-4d53-b73e-8aaec8d17cd6/26-6a5620a61b2dd.webp' /></p><p> 

இவ்வாறு மாற்றப்பட்ட சிறைக் கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். </p><p>

சர்வதேசத்தின் மத்தியில் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் திட்டமிட்டு இதுபோன்ற வதந்திகளை பரப்புவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு மரணங்கள் 48 ஆக உயர்வு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70000ஐ நெருங்குகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/sri-lanka-s-dengue-cases-near-70000-this-year-1784001102"></link>
            <id>https://muthanmai.com/article/sri-lanka-s-dengue-cases-near-70000-this-year-1784001102</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70,000ஐ எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70,000ஐ எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
 

அந்தப் பிரிவின், நேற்றைய(13.07.2026) நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 69,951 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன</p><p>மேலும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இதற்கிடையில், ஜூலை12 ஆம் திகதி நிலவரப்படி பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 68,672 ஆக இருந்தது.</p><h2>ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களில்</h2><p>அதாவது ஜூலை13 ஆம் திகதி மட்டும் 1,279 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

 

மேற்கு மாகாணத்தில் இதுவரை 33,127 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகி, அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b241e9d7-3681-4a83-bcbc-a7b2630e6c3e/26-6a55b51c590ce.webp' /></p><p>கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,464 நோய்த்தொற்றுகளும், அதைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 14,004 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
</p><p>
 

மேலும், ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களில் 14,572 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
</p><p>
 

இந்த ஆண்டில் இதுவரை பதிவான அதிகபட்ச மாதாந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் ஆகும். அதன்போது 21,538 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-14T11:45:21+00:00</updated>
        </entry>
    </feed>
