<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-09-18T12:16:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசினால் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/assets-worth-140-mn-frozen-over-suspected-illegal-1789703587"></link>
            <id>https://muthanmai.com/article/assets-worth-140-mn-frozen-over-suspected-illegal-1789703587</id>
            <summary type="text">சட்டவிரோத முறையில் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உரிமையாளர்களின் சுமார் 140 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத முறையில் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உரிமையாளர்களின் சுமார் 140 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு, முடக்கியுள்ளது.
</p><p>
இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் வத்தைளை பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய 900 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
</p><p>
மற்றைய நபர் தனமல்விலப் பிரதேசத்தை சேர்ந்தவராகும். சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 350 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஜீப் வண்டியை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><b>சொத்துகள் விசாரணைப் பிரிவு&nbsp;</b></h2><p>

வத்தைளைப் பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்துள்ள சொத்துகள் தொடர்பில், சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/061f8d31-6553-43b9-a301-551b1076fcd5/26-6aacf83b61c82.webp' /></p><p>பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
400 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள 7 பேர்ச்சஸ் காணியும் இரு மாடிக் கட்டடமும், </p><p>300 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹுனுப்பிட்டிய, வத்தைளை முகவரியில் அமைந்துள்ள 17 பேர்ச்சஸ் காணியும் இரு வீடுகளும், </p><p>50 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹுனுப்பிட்டிய, வத்தைளை முகவரியில் அமைந்துள்ள 5 பேர்ச்சஸ் காணியும் கட்டடமும், </p><p>70 லட்சம் ரூபாய் பெறுமதியான காந்தி மாவத்தை, ஹுனுப்பிட்டிய முகவரியில் அமைந்துள்ள 3 பேர்ச்சஸ் காணியும் கட்டடமும், </p><p>8 லட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்பேசியா வகைத் கார் ஒன்றும் அதிகாரிகளால் முடக்கப்பட்டள்ளது.</p><h3><b>

போதைப்பொருள் வர்த்தகம் </b></h3><p>சந்தேக நபர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாக ஈட்டியுள்ள சொத்துகள் மீது இன்று முதல் 14 நாட்களுக்கு செயற்பாட்டை முடக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3da2f1ba-114f-4d9a-bd1c-ba54d7a91933/26-6aacf83a7e263.webp' /></p><p>இந்த நிலையில் தனமல்விலப் பிரதேசத்தில் வசிக்கும் நபர் சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்துள்ள சொத்துகள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
அதற்கமைய, சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணையையும் ஆரம்பித்துள்ளது.
</p><p>
அந்த விசாரணைக்கமைய, மேற்கண்ட சந்தேக நபர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்துள்ள 350 லட்சம் ரூபாய் பெறுமதியான டொயோட்டா வகைத் ஜீப் வாகனத்தை விற்பனை செய்தல், கைமாற்றுதல் மற்றும் வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் நேற்று முதல் 14 நாட்களுக்கு செயற்பாட்டை முடக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
 </p>]]></content>
            <updated>2026-09-18T10:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பி மீதான வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/mp-archuna-in-baseline-road-accident-case-1789720795"></link>
            <id>https://muthanmai.com/article/mp-archuna-in-baseline-road-accident-case-1789720795</id>
            <summary type="text"> 


நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் வாகன விபத்தை ஏற்படுத்தி, சாரதியை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதிவாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p> 


நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் வாகன விபத்தை ஏற்படுத்தி, சாரதியை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதிவாதி தரப்பு சாட்சிகளை விசாரிப்பதற்கான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>

கொழும்பு மேலதிக நீதிபதி நுவன் கௌசல்ய நேற்று (17) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.</p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு</h2><p>
</p><p>
கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு பேஸ்லைன் வீதியில் (Baseline Road) ஏற்பட்ட வாகன விபத்தொன்றை அடுத்து, ஒருவரை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக இந்த வழக்கு பதியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/739e0247-8065-43a3-9e24-fb3aaeb4b720/26-6aacfed047fb2.webp' />&nbsp;</p><p>இந்த வழக்கில் முன்னதாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், அர்ச்சுன ராமநாதனுக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதிபதியால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. </p><p>

இதன்பின்னர் அவர் சட்டத்தரணி ஊடாக முன்னிலையானதை தொடர்ந்து அந்த பிடியாணை நீதிமன்றத்தால் திரும்பப்பெறப்பட்டது.
</p><p>
இதற்கமைய, வழக்கின் பிரதிவாதி தரப்பு சாட்சிகளை விசாரிப்பதற்கான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>




</p>]]></content>
            <updated>2026-09-18T09:26:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு - நாளை முதல் கடுமையாகும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/wearing-seatbelts-on-expressways-becomes-mandatory-1789719128"></link>
            <id>https://muthanmai.com/article/wearing-seatbelts-on-expressways-becomes-mandatory-1789719128</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர்.அதன்படி அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர்.</p><p>அதன்படி அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப் பட்டிகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் நாளை (19.09.2026) முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இதற்காக வழங்கப்பட்டிருந்த சுமார் ஒரு வருட கால சலுகைக் காலம் இன்றுடன் முடிவடைவதால், நாளை முதல் ஆசனப் பட்டி அணியாமல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.</p><h2>அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது</h2><p> </p><p>

இதற்கமைய, ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்கள் நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.</p><p> 

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும் என பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.</p><p> 

ஆசனப் பட்டிகளை அணியாததால் வீதி விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, இதன்காரணமாகவே இச்சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa2303bf-ec77-4545-919d-1f2b23e6fd3b/26-6aacf753be6db.webp' /></p><p> 

அபராதம் விதிப்பதையோ அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதையோ மட்டுமே நோக்கமாகக் கொண்டு இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>ஆசனப்பட்டி அணிதல்</h2><p>குறிப்பாக வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும் என்றும், ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்களில் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முயற்சிக்க வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>

இதேவேளை, ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களில் தயாரிப்பாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்பட்டிருக்காததால், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறிது காலம் வழங்க வேண்டியிருந்ததாக வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.</p><p> 

அவ்வாறான வாகனங்களில் ஆசனப் பட்டிகளைப் பொருத்திக் கொள்வதற்காகப் பல சந்தர்ப்பங்களில் சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த இறுதிச் சலுகைக் காலமும் இன்றுடன் முடிவடடைவதாக அவர் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-18T08:56:31+00:00</updated>
        </entry>
    </feed>
