<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-07-28T11:49:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனை வைத்தியசாலை உணவுக் கொள்வனவு டெண்டரில் இலஞ்சம் பெற்ற தொழிலதிபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/arrested-peradeniya-hospital-food-procurement-1785219381"></link>
            <id>https://muthanmai.com/article/arrested-peradeniya-hospital-food-procurement-1785219381</id>
            <summary type="text">பேராதனை போதனா வைத்தியசாலையின் உணவுக் கொள்வனவு டெண்டர் தொடர்பாக ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தொழிலதிபர் ஒருவர் உட்பட இருவரை லஞ்ச ஊழல் விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேராதனை போதனா வைத்தியசாலையின் உணவுக் கொள்வனவு டெண்டர் தொடர்பாக ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தொழிலதிபர் ஒருவர் உட்பட இருவரை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த நபர்கள் நேற்று (27.07.2026)&nbsp;கம்பளை தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யபட்டுள்ளனர்.&nbsp;</p><p>சந்தேக நபர்கள்&nbsp;கம்பளை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவருக்கு உதவிய நபர் என்று கபவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>2027ஆம் ஆண்டிற்காக பேராதனை போதனா வைத்தியசாலையின் சமையலறைக்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான டெண்டர் விண்ணப்பக் கோரலின் போதே இந்த இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமா ஆகியோரின் பெயர்களில் சமர்ப்பிக்கப்பட்ட டெண்டர் விண்ணப்பங்களை வாபஸ் பெற்று, முறைப்பாட்டாளருக்குப் போட்டியின்றி டெண்டர் கிடைப்பதற்கு வழிசெய்வதாகக் கூறி சந்தேகநபர்கள் ஆரம்பத்தில் ரூ. 30 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.
</p><p>
பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அந்தத் தொகை ரூ. 25 லட்சமாகக் குறைக்கப்பட்டு, இறுதியாக ரூ. 20 லட்சமாக வந்துள்ளது.</p><p>
ஒப்பந்தப்படி ரூ. 20 லட்சம் லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போது லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் பொறி வைத்து இவர்களை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T07:03:35+00:00</updated>
        </entry>
    </feed>
