<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-09-06T10:23:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலைக் காப்பாற்றத் துடிக்கும் ஐ.தே.க! ஆளும் தரப்பு பகிரங்க குற்றாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/nalinda-slams-unp-over-response-to-namal-remand-1788682192"></link>
            <id>https://muthanmai.com/article/nalinda-slams-unp-over-response-to-namal-remand-1788682192</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டது.</p><p>இந்த அறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>வானூர்திக் கொள்முதல்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,&nbsp; நாமல் ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டப்படுவதோ அல்லது அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவதோ புதிதல்ல

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஏர்பஸ் வானூர்திக் கொள்முதல் விவகாரத்தில் 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே, நீதிமன்றமே நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b00ca23-60af-48dd-9706-9b9e2198a225/26-6a9d26453106a.webp' /></p><p>இந்தநிலையில், நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை அந்தக் கட்சியின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஐக்கிய தேசியக்கட்சியை உண்மையாக நேசிப்பவர்களும் அந்தக் கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களும் கூட இந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T09:16:22+00:00</updated>
        </entry>
    </feed>
