<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-08-02T11:24:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் செய்தால் 3 மடங்கு கூடுதல் அபராதம்...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/sl-amends-anti-corruption-law-with-tougher-rules-1785660725"></link>
            <id>https://muthanmai.com/article/sl-amends-anti-corruption-law-with-tougher-rules-1785660725</id>
            <summary type="text">2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் (Anti-Corruption Act) அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திருத்தங்களின் தொடர், அரசாங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் (Anti-Corruption Act) அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திருத்தங்களின் தொடர், அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த புதிய திருத்தங்கள் மூலம் ஊழல் நடவடிக்கைகளின் மூலம் ஈட்டப்படும் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை அதிகரித்தல் மற்றும் பிணை வழங்குவதற்கான நிபந்தனைகளை கடுமையாக்குதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
புதிய திருத்தத்தின்படி, ஒரு நபர் ஊழல் நடவடிக்கை மூலம் சொத்துக்களைப் பெற்றுள்ளார் அல்லது மாற்றியுள்ளார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டால் அந்த சொத்தின் மதிப்பை விட குறைந்தது 3 மடங்கு கூடுதல் அபராதத்தை நீதிமன்றம் விதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><h2>நிதி இழப்பு&nbsp;</h2><p>

முன்னைய சட்டத்தின் கீழ் ஊழல் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகளுக்கு மிகாமல் கடின உழைப்புடன் கூடிய சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் ரூபாய் அபராதமாகும்.
</p><p>
மேலும், ஊழல் நடவடிக்கையால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டால் அந்த முழு இழப்புக்கு ஈடான தொகையை கூடுதல் அபராதமாக வசூலிக்கவும் புதிய திருத்தம் வழிவகை செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c4e97b-87d9-4157-aced-d07fc4025874/26-6a6f11a5aabda.webp' /></p><p>

அத்தோடு கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பிணை வழங்கும் நடைமுறையும் புதிய திருத்தத்தின் மூலம் கடுமையாக்கப்பட்டுள்ளது.</p><ol><li>

ரூபாய் 100,000 இற்கு குறையாத லஞ்சம் பெறுதல், கொடுத்தல் அல்லது கோருதல்.</li><li>

ரூபாய் 500,000 இற்கு குறையாத அரச இழப்பை ஏற்படுத்துதல்.
</li></ol><p>
மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்ட சந்தேகநபர்களுக்குப் மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்க முடியும். </p><p>

அதுவும் விதிவிலக்கான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சிறைத்தண்டனை&nbsp;</span></p><p> 

இதன் மூலம் நீதவான் நீதிமன்றங்களுக்கு இத்தகைய சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது.</p><p>

சொத்து அறிவிப்புகளைப் பகிரங்கப்படுத்தும்போது தனிநபர் தரவுகளைப் பாதுகாப்பது தொடர்பாகப் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48399f81-44bf-4f7f-a129-c16822d6d7c1/26-6a6f11a44754b.webp' /></p><p>

இதனடிப்படையில், பகிரங்கப்படுத்தப்பட்ட சொத்து அறிவிப்பை, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அல்லது நிறுவனத்திற்குச் சமர்ப்பிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்துவது குற்றமாகும். </p><p>

இத்தகைய குற்றத்திற்கு ரூபாய் 100,000 அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.</p><p>
</p><p>முன்னர் இருந்த சட்டத்தின் படி, சொத்து அறிவிப்பாளருடன் 6 மாதங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழும் நபர்களின் சொத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டியிருந்தது.</p><h2>தனிநபர் சுதந்திரம்</h2><p>

ஆனால், தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அந்தத் தேவை புதிய திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>தேசிய அடையாள அட்டை எண், கடவுச்சீட்டு எண் மற்றும் அதிகாரிகளால் அடையாளத்திற்காகப் பயன்படுத்தப்படும் பிற எண்களும் பாதுகாக்கப்பட்ட தனிநபர் தரவுகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d54c586d-74bc-441e-a277-7830c90409f1/26-6a6f11a4ef8d3.webp' /></p><p>

இந்த திருத்தத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், குறிப்பிட்ட நிறுவனங்களாகக் கருதப்படும் நிறுவனங்களில் அரசின் பங்கு சதவீதத்தை மாற்றுவதாகும்.
</p><p>
முன்னர் அரசுக்கு 25% பங்குடைமை கொண்ட நிறுவனங்களும் இச்சட்டத்திற்கு உட்பட்டிருந்தன.</p><p> 

புதிய திருத்தத்தின் மூலம் அந்த எல்லை 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனடிப்படையில் அரசுக்கு 50 இற்கும் குறைவான பங்குடைமை கொண்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் அல்லது ஊழியர்கள் இனி இச்சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள ஆகக் கருதப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-02T09:48:18+00:00</updated>
        </entry>
    </feed>
