<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-09-02T16:17:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/2-year-old-child-died-falling-into-the-bucket-1788326885"></link>
            <id>https://muthanmai.com/article/2-year-old-child-died-falling-into-the-bucket-1788326885</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில்
இரண்டு வயது 8 மாதங்களுமான குழந்தையொன்று வாளிக்குள்&amp;nbsp;வீழ்ந்த நிலையில்&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில்
இரண்டு வயது 8 மாதங்களுமான குழந்தையொன்று வாளிக்குள்&nbsp;வீழ்ந்த நிலையில்&nbsp;உயிரிழந்துள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று(01.09.2026) இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>தலைகீழாக வாளிக்குள் விழுந்து</h2><p>
கொக்கட்டிச்சோலை கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான
நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cdd5bf8-3efb-4a02-a1c4-11cd3cf99f46/26-6a97b86c32d0f.webp' /></p><p>
குறித்த சிறுவன் வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய
வாளியின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.</p><p> இதன்போது, எதிர்பாராதவிதமாக
சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல்
ஏற்பட்டுள்ளது.</p><p>உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு
சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள்
தெரிவித்துள்ளனர்.
</p><h2>மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p>
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை
அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப்
பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9122bc5-867c-4c84-a487-18937b2a9bbf/26-6a97b86ce81f1.webp' /></p><p>

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:09:52+00:00</updated>
        </entry>
    </feed>
