<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-08-27T15:31:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் கடலில் புதைந்து கிடக்கும் இயற்கை எரிவாயு வளம் - இலங்கையின் புதிய முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/natural-gas-resources-in-the-sea-of-mannar-1787821511"></link>
            <id>https://muthanmai.com/article/natural-gas-resources-in-the-sea-of-mannar-1787821511</id>
            <summary type="text">இலங்கையின் கடற்பரப்பிற்கு உரித்தான மன்னார் படுகையில் 2026ஆம் ஆண்டுக்கான எண்ணெய் ஆய்வு நடவடிக்கைகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை இலங்கை பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கடற்பரப்பிற்கு உரித்தான மன்னார் படுகையில் 2026ஆம் ஆண்டுக்கான எண்ணெய் ஆய்வு நடவடிக்கைகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை (CPDA) ஆரம்பித்துள்ளது.</p><p>

இலங்கையின் கடல்சார் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியும் நோக்கில், இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் கீழ், மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய நான்கு ஆய்வுப் பிரிவுகள் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
</p><h2>

2 பில்லியன் பீப்பாய் பெற்றோலிய வளம் கண்டுபிடிப்பு</h2><p>


சர்வதேச நிறுவனங்கள் நவீன புவியியல் ஆய்வு முறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளவும், CPDA வசமுள்ள புவியியல் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96bff65b-51f6-42b9-ad3b-da944f9830a3/26-6a8ffe107f230.webp' /></p><p>
</p><p>
முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், மன்னார் படுகையில் பெற்றோலியமும் இயற்கை எரிவாயுவும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

தற்போதைய மதிப்பீடுகளின்படி, மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய் அளவிலான பெற்றோலிய வளங்களும், 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு வளங்களும் அகழ்வின் மூலம் மீட்டெடுக்கக்கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த புதிய அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையானது, சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதுடன், இலங்கையின் கடல்சார் பெற்றோலிய வளங்களை மேலதிகமாக ஆய்வு செய்வதற்கும் நாட்டின் எரிசக்தித் துறையின் வளர்ச்சிக்கும் முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T10:06:53+00:00</updated>
        </entry>
    </feed>
