<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-07-16T15:34:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்ப கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/request-for-applications-for-teacher-transfers-1784208907"></link>
            <id>https://muthanmai.com/article/request-for-applications-for-teacher-transfers-1784208907</id>
            <summary type="text">தேசியப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசியப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
</p><p>
அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பங்கள் 2026 ஜூலை 16 முதல் ஜூலை 30 வரை தேசியப் பாடசாலை ஆசிரியர் இடமாற்ற (NSTT) இணையத் தளத்தின் மூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
</p><p>
ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை <a href="https://nstt.moe.gov.lk/" target="_blank">http://nstt.moe.gov.lk</a> என்ற இணையத்தளத்தில் மூலம் பூர்த்தி செய்து, அதன் அச்சுப் பிரதியைப் பெற்று, சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் 2026 ஜூலை 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.</p><h2>ஊடாக இடமாற்ற நடவடிக்கை</h2><p>
அந்த அச்சுப் பிரதியை சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகத்தின் ஊடாக இடமாற்ற நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4833a11-b9b4-468c-be8d-da766d8eee63/26-6a58de0d5f469.webp' /></p><p>
</p><p>
மேலும், ஆசிரியர்கள் நேரடியாக கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.</p><p>

எனவே, தகுதியுடைய அனைத்து ஆசிரியர்களும் ஆன்லைன் முறையை மட்டுமே பயன்படுத்தி, அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
தேசியப் பாடசாலைகளுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்களை அமைச்சின் இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றத் திட்டம் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-16T13:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருதமுனையில் பேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/bus-motorcycle-accident-in-maruthamunai-one-killed-1784198241"></link>
            <id>https://muthanmai.com/article/bus-motorcycle-accident-in-maruthamunai-one-killed-1784198241</id>
            <summary type="text">அம்பாறை - மருதமுனை பிரதான வீதியில், பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - மருதமுனை பிரதான வீதியில், பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்தொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35478c9e-acc0-41f6-868c-f6fd20e9e3b4/26-6a58b5d1e6c34.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்ததுடன், மட்டக்களப்பு கல்லடி இசை மற்றும் நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவராவார்.</p><p> திருமண உறவின் காரணமாக தற்போது பாண்டியிருப்பு பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்திற்கான காரணம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T10:44:04+00:00</updated>
        </entry>
    </feed>
