<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video</title>
    <subtitle type="html"><![CDATA[Muthanmai Provides all latest Muslim news, breaking news, TV News, video, audio, photos and other news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <id>https://muthanmai.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://muthanmai.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mu/img/logo.png</logo>
            <updated>2026-09-10T11:25:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் தீவு மணல் அகழ்வு தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் சபை கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://muthanmai.com/article/catholic-bishops-conference-concerned-sand-mining-1789017065"></link>
            <id>https://muthanmai.com/article/catholic-bishops-conference-concerned-sand-mining-1789017065</id>
            <summary type="text">எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
மன்னார் தீவில் இடம்பெறும் மணல் அகழ்வு நடவடிக்கைகளால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் தமது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கத்தோலிக்க ஆயர்கள் சபை&nbsp;</h2><p>
</p><p>
பொருளாதார அபிவிருத்திக்கான சாதகமான முயற்சிகளாக இத்தகைய நடவடிக்கைகள் கருதப்பட்டாலும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதுடன், திட்டங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என கத்தோலிக்க ஆயர்கள் சபை வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fe6dabf-79c4-44a0-9958-5f6a99d25406/26-6aa2418bce115.webp' /></p><p>மேலும், எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு முன்னர் அப்பகுதி மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் முறையான கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.</p><p>
மன்னார் தீவின் மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரத்திற்கும் நீர்வளத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

இது தொடர்பில் ஆகஸ்ட் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபையின் முழுமையான அமர்விலும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:59:20+00:00</updated>
        </entry>
    </feed>
